‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என பெயர் மாற்றம் பெறும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்!

'காரைநகர் இந்துக் கல்லூரி' என பெயர் மாற்றம் பெறும்  கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்!   

IT-Sampanthan

காரைநகர் இந்துக் கல்லூரி பெயர் மாற்றம் 

கடந்த 32 ஆண்டுகள்  கலாநிதி ஆ.தியாகராசா  மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயருடன்  இயங்கி வந்த  கல்லூரி 2016 ஜனவரியிலிருந்து மீண்டும்  காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர் மாற்றம் பெறுவதை கல்லூரி அபிவிருத்திச் சங்க நிருவாகிகள், பழைய மாணவர் சங்கங்கள், பழைய  மாணவர்கள். காரை மக்கள் அனைவரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.  மக்கள் விருப்பத்திற்கிணங்க இந்த மாற்றத்தை மேற்கொண்ட கல்வித் திணைக்களத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்  கொள்கின்றனர். 
காரைநகர் இந்துக் கல்லூரியை உயர் நிலைக்கு வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் நீண்டகாமாக அதிபராகப் பணியாற்றிய கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள். நான் 1950 ஆண்டிலிருந்து  எட்டு ஆண்டுகள் அக்கல்லூரியில் படித்தவன் என்ற முறையில் அதிபர் தியாகராசா அவர்களின் அற்;பணிப்பை நன்கு அறிவேன்.
தான் வளர்த்த கல்லூரி என்பதற்காக தனது பெயரை இக்கல்லூரிக்கு வைக்கவேண்டும் என்று அவர் விரும்பியது கிடையாது.
எனவே இந்த பெயர் மாற்றத்தால் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  அதேபோல் இப் பாடசாலையை 125 ஆண்டுகளுக்கு முன்னர்  நாவலர் வழிவந்த திரு.ச. அருணாசலம் உபாத்தியாரின் வழிகாட்டலில் சயம்பு வாத்தியார் ஆரம்பித்த பாடசாலை இந்து கல்லூரியாக  விளங்குவதன் மூலம் அவர்களது ஆத்மாக்களும் சாந்தியடையும்.
இக்கல்லூரியை வளர்த்தெடுத்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்கட்கு ஞாபகார்த்த மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பழைய மாணவா ;சங்கங்களும் பழைய மாணவர்களும் முன்வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பெயர் மாற்றம் பெற்ற' காரைநகர் இந்துக்கல்லூரி' என்ற பெயர்தாங்கிய வளைவை சிறப்பான முறையில் அமைப்பதற்கு கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்(கொழும்பு) முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. 

ஐ.தி.சம்பந்தன்
காரை இந்துக கல்லூரி பழைய மாணவார்கள் சார்பாக