காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

‘யாழ்-கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம’ என்று அலுவலக முறையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்த பாடசாலையின் பெயரை ‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என்று பயன்படுத்துவதற்கு கல்வித்திணைக்களம் அனுமதி வழங்கியமையை அடுத்து இப்புதிய பெயரின் பெயர்ப் பலகையை சம்பிரதாய பூர்வமாகத் திரை நீக்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(04-01.2015) அன்று காலை11:00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக பாடசாலை வட்டாரம் எமது இணையத்தளத்திற்கு அறியத்தந்துள்ளது.

இந்நிகழ்விற்கு கல்விப்பகுதியைச் சேர்ந்த நிர்வாக அலுவலர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டடுள்ளனர்.

நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

யாழ்/கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் காரைநகர்
காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு கல்லூரி வளாகத்தில் 4.01.2016 திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு தலைவர் திருமதி வாசுகி தவபாலன்(அதிபர்) தலைமையின்கீழ் நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினர்

கௌரவ செயலாளர் இ.ரவீந்திரன்(கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்),

சிறப்பு விருந்தினர்கள்

திரு.எஸ். உதயகுமார்(மாகாண கல்விப்பணியாளர் – வடமாகாணம்),

திரு.சு.சுந்தரசிவம்(வலய கல்விப்பணிப்பாளர் – தீவகம்),

கௌரவ விருந்தினர்கள்

திரு.ப.விக்னேஸ்வரன்(தலைவர் காரை அபிவிருத்திச்சபை),

திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்(கோட்டக்கல்விப் பணிப்பாளர்)

Name Board 1Name Board 2