மரண அறிவித்தல்
திரு. சின்னத்துரை கமலச்சந்திரன்
தங்கோடை, காரைநகர்
(மிசிசாகா, கனடா)
தாயின் மடியில்: 10.08.1949 இறைவன் அடியில்: 25.12.2015
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் தற்போது மிசிசாகா, கனடாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.சின்னத்துரை கமலச்சந்திரன் அவர்கள் 25.12.2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற (குமாரி) சின்னத்துரை மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவீஸ்வரியின் அன்புக் கணவரும், ரவிசங்கர், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரதீபா(கங்கா)வின் அன்பு மாமனாரும் அகஸ்தியனின் பேரனும், காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரன் (Banker) மற்றும் சரஸ்வதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை(28.12.2015) அன்று மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை 737 Dundas St. East, Mississauga, On, L4Y 2B5 என்ற முகவரியில் அமைந்துள்ள St.John’s Dixie Cemetry and Crematoriam இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை(29.12.2015) அன்று காலை 9:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை ஈமைக் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி: 905-677-2073
ரவி(மகன்) 905-782-4643
பரமேஸ்(மைத்துனர்) 647-271-9013