தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!


தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட உற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) அரச மற்றும் தனியார் பாடசாலைகள் பிரிவில் பங்கு பற்றித் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


2013/2014ஆம் கல்வியாண்டிற்கான மேற்படி போட்டியில் எமது பாடசாலையின் 'பசுமைப்புரட்சி' (மாணவர்களின் தரவலையம்), 'ஜொலிக்கும் நட்சத்திரங்கள்', 'வெளிச்சவீடு;'(ஆசிரியர்களின் தரவலையம்) ஆகிய தரவலயங்கள் பங்குபற்றியிருந்தன. மூன்று தரவலயங்களும் முதலாம் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.


மூன்றாம் சுற்றுப்போட்டியில் வெளிச்சவீடு (Light House) என்று பெயரிடப்பட்ட கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர்களின் தரவலயம், "Kaizen இன் புதிய பாதை"  என்ற கருத்திட்டத்தின் கீழ் வெற்றியீட்டி தேசிய மட்டத் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


கல்விநிறுவனத்தை 5S முறைமைக்குட்படுத்தி பௌதிக, மனிதவளத்தை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி வினைத்திறன்மிக்க கல்விசார் வெளியீடுகளை உருவாக்குதல், குழுசார்; உணர்வுகளை மேம்படுத்துதல் என்பனவற்றின் மூலம் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு பாடசாலை ஆசிரியர்களால் இக் கருத்திட்டத் தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது. 


Kaizen என்பது நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். இது"தொடர் முன்னேற்றம்" என்ற பொருளுடைய ஜப்பான் மொழிச் சொல்லாகும்.


இச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை ஆசிரியர்களின் சேவை, மாணவர்களின் திறன் மற்றும் பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் பங்களிப்பே காரணம் என அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் சிறப்பான பாராட்டிற்குரியவர்கள்


1.    திருமதி தயாளினி ஜெயக்குமார்
2.    திருமதி சிவந்தினி வாகீசன்
3.    திருமதி சகுந்தலா கேசவன்
4.    திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன்
5.    திரு தெய்வேந்திரம் பிரபாகரன்
6.    திருமதி சிவாஜினி லக்ஸ்மன்
7.    திரு.இராசரத்தினம் ஜீவராஜ்
8.    திரு இராசரத்தினம் இராஜகோபால் 
9.    செல்வி சிவரூபி நமசிவாயம்
10.    திருமதி கலாசக்தி றொபேசன்
11.    திருமதி கலாநிதி சிவநேசன்
12.    திரு க. குலசேகரம்


இவர்களுடன் கல்வி சாரா ஊழியர்களான 


1.    செல்வி கு. சோபனா
2.    செல்வி த.கஜந்தினி
3.    திரு.மு.சிவனேஸ்வரன்  ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள். 


இதேவேளையில் இப்போட்டியில் தகுந்த முறையில் விண்ணப்பித்து பாடசாலையின் தரவலய செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்வைப்பதற்கு அறிவுறுத்தல்களை வழங்கி வழிநடத்திய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டிற்குரியவராவர். 


இப்போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமைச் சான்றிதழைப் பெற்ற தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் கல்லூhயில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீ.விக்கினேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 


OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA