கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

 CKCA LOGO (Copy)

நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவத்தையும், பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்.

எமது சைவ மகா சபையால் 29.09.1971 அன்று வெளியிடப்பட்ட "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்" அவர்களின் நூலின் மீள்பதிப்பு (இரண்டாம் பதிப்பு) கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டது. இது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது

இந்நூல் மீள்வெளியீட்டு விழா செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் , இந்நூல் மீள்வெளியீட்டு விழா சிறப்புற வெற்றி பெற கனடா – காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது.

நன்றி,

நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்