காரைநகா் கோவளம் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட காரை விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான மென்பந்து கிாிக்கட் சுற்றுப்போட்டிகளிற்கான பாிசளிப்பு விழா இன்று 10.11.2015 நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும்,காரைஅபிவிருத்திச்சபை பொருளாளரும், திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா். சிறப்பு விருந்தினராக தீவகவலய ஆசிாிய ஆலோசகா் திரு.இளங்கோவன் கலந்துகொண்டாா். பாா்வையாளா்களுக்கான சினேகபூா்வ துடுப்பாட்டமும் கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கும் .காரை சலஞ்சஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது
இப்போட்டிக்கான கேடயத்தை காரை சலஞ்சஸ் தட்டிச்சென்றது. கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கு திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைகளும் இன்றைய நிகழ்வில் அவரது இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.
அத்துடன் மின் இணைப்பு,மைதான புனரமைப்பு, மற்றும் பௌதீக வள வேலைகள் திரு.கதிா்காமநாதனின் நிதியுதவியுடன் இணைப்பாளா் திரு.பாலச்சந்திரன் ஊடாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.