காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

KA

Karainagar (also) Needs You

அன்புடையீர்
தங்கள் தாய் மண்ணில் வசிப்பவர்கள் கடந்த கால    சூழ்நிலையிலிருந்து தலைநிமிர்நது வாழத்தொடஙிகியுள்ளனர். ஆனாலும் அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் தண்ணீர் வசதி போன்றவற்றில் இன்னும் பல அடிப்படைத் தேவைகளில் பற்றாக் குறைகள் உள்ளன. அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு தங்களைப் போன்ற புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் ஆதரவும் உதவியும் அத்தியாவசமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் காரை நலன் கருதி ஒரு சங்கம் தொடங்கியிருந்தீர்கள். ஆனால் அது வளராமல் முளையிலேயே படுத்துள்ளது. அதற்குப் பத்துயிர் ஊட்டி நமது ஊருக்குச் சேவை செய்யும் வண்ணம் செயற்படுமாறு வேண்டுகின்றேன்.
தற்சமயம் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, பிரானஸ், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் நம்மூரவர்கள் காரை நலன்புரிச் சங்கங்கள் அமைத்துப் பல அளப்பரிய சேவைகள் புரிந்து வருகின்றனர.; இச்சங்கங்கள் மூலமாக ஊருக்கு உதவுவது மட்டுமன்றி புலத்தில் வாழும் எமது வருங்காலச் சந்ததியினருககுக்; கலை கலாச்சாரம் போன்றவற்றையும் ஊக்குவித்து வருகின்றனர். தாங்களும் இவ்வழியினைப் பின்பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
மேற்கூறிய சங்கங்கள் ஊரில் இயங்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு அவ்வப்பொழுது வேண்டிய உதவிகளை வழங்குகின்றனர். ஆகவே உலகில் பலம் பொருந்தியுதும் வளம் படைத்துள்ளதுமான நாட்டில் வதியும் தாங்களும் இம்முயற்சியில் பங்கு பற்ற வேண்டுகின்றேன். நாற்பது வருடங்களுக்கு மேலாக வெளி நாட்டில் வசித்தபின் தற்சமயம் வாய்மண்ணின் வாசனையினை நுகரும் இன்ப அனுபவத்தில் இம்மடலை வரைகின்றேன்.
அன்புடன்
சிவா தி மகேசன்;
காரை அபிவிருத்திச் சபை