காரை இந்துவில் நடைபெற்ற உலக சுற்றாடல் தினமும் மரம் நடுகையும்

pasu

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில்(காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் உலக சுற்றாடல் தினம் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக்குழுவின் தலைவர் செல்வன் அ.பிரணவரூபன் தலைமையில் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள சுற்றாடல் ஒருங்கிணைப்பாளர் திரு.K.A.சிவனருள்ராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் திரு.பொ.சண்முகதேவன் அவர்களும் கௌரவ விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் ஓய்வுநிலை மருத்துவ அதிகாரி க.நடராஜா அவர்களும் பிரதேச சுற்றாடல் அலுவலர் திருமதி.வி.கல்யாணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இத்தினத்தையொட்டி கல்லூரியின்; ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ சுற்றாடலைப் பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம் என்னும் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டபின் ‘இயற்கை எனும் அன்னையைத் தேடி” என்னும் நாடகம் உட்பட மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சுற்றாடால் முன்னோடிக்குழுவினால் “பசுமை” என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது.

கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் திருமதி.பா.சிவாஜினி ஆகியோர் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.