சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு
" கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
அன்புடையீர் வணக்கம்!
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி ஆங்கில மாதம் 29ம் திகதி சனிக்கிழமை கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயத்தில் காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை போட்டிப் பரீட்சை கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரால் நடாத்தப்பட இருக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே!
இம்முறை போட்டிப் பரீட்சையை சம காலத்தில் சுவிற்சர்லாந்திலும் நடாத்தவதற்கு பரிட்சை குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய சவிஸ் சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா தலைமையில் சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெற இருக்கின்றது.
பரிட்சைநிலையம் : சரஸ்வதி வித்தியாலயம் சூரிக்
காலம்: 29-08.2015 சனிக்கிழமை
இலங்கைநேரம்: 10.00-12.00மணி
சுவிஸ்நேரம்: 15.00-17.00மணி
இவ் வருடம் போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.
(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.
(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம், கல்வியாண்டு மாணவர்கள.;
(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.
அன்பான சுவிஸ் வாழ் காரை பெற்றோர்களே! எம் மண்ணின் மாணவச் செல்வங்களின் அறிவு விருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்கு தங்களது மேலான உதவியைக் கோரி நிறகின்றோம். தங்களது பிள்ளைகளை இப் போட்டிப் பரீட்சையில் பங்கு கொள்ள வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மாணவர்கள் மேலதிகமான விபரங்களை பெறுவதற்கு காரைநகர்.கோ, காரைநகர்.கொம் என்ற இணைய தளத்தினூடாக அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். அ) 044 423 04 05, ஆ) 043 321 35 63, இ) 043 305 26 77
இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் நகரங்களிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் நிறுவனம், பாடசாலை, ஊரபிவிருத்திச் சங்கம் என்பவற்றிற்கு ஊடாக மாணவர்களுக்கு இவ்வறிவித்தலை விளம்பரப்படுத்தி பங்கு பற்ற விரும்புவோரின் பெயர், பிரிவு, ஆகிய விவரங்களை மட்டும் முதலில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும். சுவிற்சர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தை முன்மாதிரியாக கொண்டு புலம்பெயர் தேசத்து உறவுகள் பாடசாலைகள் சபைகள், சங்கங்கள் பரீட்சை நிலயத்தை தெரிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு
ஆடி 2015