காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவ்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப்போட்டி 6-02-2013 மு.ப. 9.00 மணிக்கு கல்லூரி
அதிபர்.திரு.வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற கல்லூரியின் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி.இரஞ்சிதா.செல்வராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் திரு.எஸ்.நவகிஸ்ணராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.கொடியேற்றல் நிகழ்வுகள் மாணவர் அணிநடையுடன் விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பமாகியது. பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் விளையாட்டு விழாவினைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.
1 comments
so sweet…………………. teacher