காரைநகருக்கான தனியான பிரதேச சபை முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் முயற்சியால் அமைக்கப்பட்டமையினால் ஏனைய பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படுவது போல அனைத்து ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான பக்கோ இயந்திரம் காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைத் தலைவர் வே.ஆணைமுகன் மற்றும் பிரதேச சபை அலுவலர்கள் கொழும்பு சென்று பெற்றுள்ளனர்.
கொழும்பிலிருந்து மேற்படி பக்கோ இயந்திரம் தியாகராசா பரமேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் காரைநகரை வந்தடைந்தது.காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திற்க அருகில் உள்ள குளக்கட்டில் வைத்து இறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் பிரதேச சபை வளாகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
காரைநகரில் உள்ள குளங்கள்,வாய்க்கால்கள் ஆழப்படுத்திப் புனரமைப்பதற்கும் ஏனைய பாரிய துப்புரவுப் பணிகளுக்கும் இந்தப் பக்கோ இயந்திரம் பேருதவியாக அமையும்.