மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரை இந்து) சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Vythees manivasga

ஆயிரம் பிறைகண்ட பேரறிஞர், தத்துவ கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள்
எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் முதுஅறிஞராகவும், மூத்த மாணவனாகவும் விளங்கிய குருக்கள் ஐயா அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் கலங்கி நிற்கின்றது.

அண்மையில் பவளவிழா மலர் வெளியீட்டில் தள்ளாத வயதிலும் எமது கல்லூரிக்குத் தரிசனம் தந்து மக்களுக்கு ஆசி வழங்கிய பெருமகனாவார். குருக்கள் ஐயா அவர்கள் கற்றறிந்த பேராளன். ஆசாரம், ஒழுக்கம், பேச்சுத்திறன், எடுத்த காரியத்தை திறமையாக முடிக்கும் திறன், விடா முயற்சி, எளிமையான தோற்றம், இனிமையாக வழங்கும் அறிவுரை என்பன ஒருங்கே அமையப்பெற்ற பெருமகனார். அன்னாரின் பிரிவு எமது கல்லூரிச் சமூகத்திற்கும், காரை வாழ் மக்களுக்கும் சைவத்தமிழ் உலகிற்கும் பேரிழப்பாகும். 

அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடய ஈழத்துக் கூத்தனை இறைஞ்சுகின்றோம்.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர். திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் பாடசாலை சமூகத்தின் சார்பில் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழுமையான கண்ணீர் அஞ்சலிப்பிரசுரத்தைக் கீழே தருகின்றோம். 

vaithees from School