மரண அறிவித்தல்
திரு கதிரவேலு முருகேசு
(ஓய்வு பெற்ற நிதி ஆணையாளர் இலங்கை)
காரைநகரைச் சேர்ந்தவரும் மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கன்னாதிட்டி, பிறவுண் றோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரவேலு முருகேசு 12.02.2015 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்
யோகலட்சுமி (இளைப்பாறிய ஆசிரியை நாவலர் மத்திய மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்) யின் அருமைக் கணவரும்
பாலமுரளி (லண்டன்), பிரபாகரன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும் நாகராஜேஸ்வரி (இலங்கை) காலஞ்சென்ற மகேஸ்வரி, தியாகராஜா (அவுஸ்திரேலியா) புவனேஸ்வரி (அவுஸ்திரேலியா) நடராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரனும், லதா, சத்தியரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்
கிருஷ்ணா, விதுஷன், சரிகா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : இலங்கை : 01194212227737 (Yogam)
: 01194778966470 (Murali)
: 01194768422976 (Praba)
கனடா : 416-602-2317 / 905-472-1163 (Ruby)