காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.

காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.

நேற்று காலை 8மணிக்கு ஆரம்பமாகி மாலை 8மணிவரை நடைபெற்ற காரைக்கொண்டாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,

விநோத உடைப்போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் முன்னைய வருடங்களைப்போன்று நடைபெற்றன.

பலதரப்பட்ட எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. வழமையைப்போல் காரை மக்கள் தமது உறவினர், நண்பர்களுடன் அளாவளாவியதைக் காணமுடிந்தது. சிலர் வேலை நிமித்தம் காரணமாக சமுகம் தரமுடியவில்லை என அறியத்தந்தார்கள்.

இந்த காரைக் கொண்டாட்டம் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவிகள் செய்த அனைத்து காரைநகர் மக்கள் அனைவருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.