2014 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களுக்கான பாராட்டு விழா 29/01/2015 வியாழக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களுக்கான பாராட்டு விழா 29/01/2015 வியாழக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பாராட்டு விழாவுக்கான பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக்கிளையின் முகாமையாளர் திரு. வி. விஜயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக தீவகக்கல்வி வலய ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆலோசகர் திரு.மு.கேசவன் அவர்களும், கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தன் அவர்களின் புத்திரி திருமதி நளாயினி குணநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 மாணவர்களும் நினைவுச்சின்னம்(Momento), மற்றும் புத்தகப்பரிசில் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும் புத்தகப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் தனது உரையில் இந்நினைவுச் சின்னங்கள் வழங்குவதற்கு அனுசரணையாளராக இருந்த அமரர். வாரிவளவு கந்தையா கணேசன்(கனடா) அவர்களின் புத்திரி அவர்களுக்கும் புத்தகப் பரிசில் வழங்குவதற்கு அனுசரணையாளராக இருந்த திரு. S. கணநாதன் (உரிமையாளர் – Quency Distributers) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

DSC01151 DSC01159 DSC01177 DSC01179 DSC01181 DSC01182 DSC01183 DSC01184 DSC01185 DSC01186 DSC01187 DSC01188 DSC01191 DSC01276 DSC01278 DSC01280 DSC01281 DSC01284 DSC01286 DSC01288 DSC01290 DSC01292 DSC01294