கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி திரைப்படத்தின் கதை சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில நூலாக எழுதப்பட்டு நாளைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

 

கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி திரைப்படத்தின் கதை சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில நூலாக எழுதப்பட்டு நாளைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்களின் கதை வசனம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப் பெற்று ரசிகர்களின் பேராதரவினைப் பெற்ற ஒருத்தி-2 திரைப்படத்தின் கதையினை ரொறன்ரோவின் உயர்தரப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்ற சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில வடிவத்தில் எழுதப்பட்ட நூல் நாளைய தினம் 15-04-2023 சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்நூலினை எழுதிய சபிதா அவர்கள் காரை.மண் தந்த மற்றொரு வானொலிக் கலைஞரான திரு.கோகுலன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்: