காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும் காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும்

காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

எதிர்வரும் 10-12-2022 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு ஸ்காபுரோ தமிழிசைக் கலா மன்ற அரங்கில் கனடா-காரை கலாசார மன்றம் 21வது ஆண்டாக வழங்கும் காரை வசந்தம் 2022 கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது. மண்மீது பற்றுதி கொண்ட காரைநகர் மக்கள் உணர்வோடு சங்கமித்து மகிழுகின்ற பெரு விழாவான காரை வசந்தம் விழாவில் என்றும் போல சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. திரளான காரை.மண்ணின் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அவர்களின் வசதி கருதி சிற்றுண்டிகள் பரிமாறப்படுவதுடன் எடுத்துச் செல்வதற்கான இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.

வீடுவிற்பனை முகவர் விக்கி வேலாயுதன் அவர்களின் அனுசரணையில் அதிஸ்டசாலி ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாகக் கிடைக்கவுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை விழாவில் கலந்துகொள்வோர் மண்டப நுழைவாயிலில் அமைந்துள்ள கருமபீடத்தில் வழங்கப்படும் சீட்டொன்றில் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை மட்டும் எழுதி இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றினுள் சேர்த்து விட்டால் விழாவின் இறுதியில் அவை அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர் ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாக வழங்கிவைக்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றம்