மரண அறிவித்தல், திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia) (இடைப்பிட்டி, காரைநகர்) (கோலாலம்பூர், மலேசியா)

 

மரண அறிவித்தல்

திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன்

(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia)

(இடைப்பிட்டி, காரைநகர், கோலாலம்பூர், மலேசியா)

அன்னை மடியில்: 19-07-1934                                        ஆண்டவன் அடியில்: 11-09-2022

இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (11-09-2022) அன்று மலேசியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா)-இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா)-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னாவளை, களபூமியைப் பூர்வீகமாகவும், கோலாலம்பூர், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற அன்னரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி (உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, மலேசியா), காலஞ்சென்ற இரவீந்திரன்(பட்டயக் கணக்காளர், சிங்கப்பூர்), சாந்தி MSc (கணனி தொழில்நுட்பவியலாளர், மலேசியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேந்திரன் (நிறைவேற்றுப் பணிப்பாளர், மலேசியா), சுரேந்திரன் (பொது முகாமையாளர், Hewlett Packard, மலேசியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேசுவரி(பாலாவோடை), பரமேசுவரி(புதுவீதி), காலஞ்சென்ற சரசுவதி(ஓய்வுநிலை ஆசிரியர், கொழும்பு), காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர், கனடா), பாக்கியம்(கனடா), இராசம்மா(யாழ்ப்பாணம்), இரத்தினேசுவரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் அதிபர், பாலாவோடை), காலஞ்சென்ற நல்லையா, தம்பிப்பிள்ளை(ஓய்வுநிலை நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்), சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற சிவசோதி(முன்னாள் ஓவசியர், ஓமான், கனடா), காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு(முன்னாள் அதிபர்) காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேசுவரி, புவனேசுவரி, முருகேசம்பிள்ளை(முன்னாள் நிலஅளவையாளர், மலேசியா), கமலாவதி மற்றும் நல்லபிள்ளை, காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராஜா, கணபதிப்பிள்ளை, ஓங்காரசிங்கம், சுந்தரலிங்கம், யோகேசுவரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr.சாளினிதேவி-Dr.சர்வேஷ்குமரன், Dr.சுவேனிதாதேவி-Dr.சிவருபன், கேசவவர்மன், தர்சினி, ராகவ் ஞானேந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அத்விகாவின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக திங்கட்கிழமை(12-09-2022) அன்று 11:00 மணி முதல் 1:00 மணி வரை No.6, Jalan TK 2/1A, Taman Kinrara, 47180 Puchong Selangor என்ற முகவரியில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் MBPJ Crematorium, KG, Tunku Petaling Jaya மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
ஜெயந்தி ஜெகதீசன்(மகள்), மலேசியா (60)13 335 5457
சாந்தி ஜெகதீசன்(மகள்), மலேசியா (60)13 306 3020
தகவல்: திருமதி.பாக்கியம் சிவசோதி(தங்கை), கனடா +1-905-642-0128