கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

 

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/7A9xmveA1MUdKiFZ7