திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் மறைவு குறித்து காரை ஒன்றியம் ஜெர்மனி வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலிகள்

காரை ஒன்றியம் ஜெர்மனியின் உபதலைவரும் ஒன்றியத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு வழிகாட்டியாகவும் செயற்பட்டவருமான திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் இழப்பு காரைநகர் மக்களிற்கு ஒரு பேரிழப்பாகும்.

சங்கங்கள், சபைகளுக்கு அப்பால் அன்னார் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த காலங்களில் இருந்தே காரைநகர் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை காட்டியவர். ஜெர்மனியில் வாழ்ந்த காரைநகர் மக்களுக்கு 80 களிலேயே உதவிக்கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டவர்.

வேலை வாய்ப்புக்கள், சமூக நலன்கள், வதிவிடப் பிரச்சனைகள் என வாழ்ந்த காரைநகர் மக்களுக்கு ஜெர்மனியில் தன்னால் முடிந்த அளவிற்கு மேலாக அனைத்து விதங்களிலும் முன்னின்று உழைத்தவர் .

காரைநகரின் வளர்ச்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு காரைநகர் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றிற்கு என்றும் தனது உதவிகளை செய்து வந்தவர்.

ஐரோப்பாவில் இயங்கும் அனைத்துக் காரைநகர் மக்களின் அமைப்புக்களுடனும் தொடர்புகளை பேணி அவற்றினூடாக காரைநகர் மக்களிற்கான உதவிகளை ஊக்குவித்தவர்.

காரைநகர் மக்களுக்கு ஜெர்மனியில் ஒரு அமைப்பு உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முன்னோடியாகவும் வாழ்ந்தவர்

நல்ல ஒரு நண்பர், சிறந்த குடும்பத்தலைவன் இன்று எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்

அன்னாரின் இழப்பிற்கு ஜெர்மனியில் வாழும் காரைநகர் மக்களின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்

காரை ஒன்றியம் ஜெர்மனி