காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 03.07.2019 புதன்கிழமை இரவு இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா கலை நிகழ்வுகள்!
Temples
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 03.07.2019 புதன்கிழமை இரவு இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா கலை நிகழ்வுகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி! (பகுதி-1)
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி! (பகுதி-2)
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி!
காரைநகர் களபூமி
திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில்
விகாரி வருஷ பிரமோற்சவ விஞ்ஞாபனம்-2019
குகநேய செல்வர்களே!
ஈழவள நாட்டின் வடமேற்பாகத்தில் காரைநகரில் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத்தந்தருளும் பொருட்டு திக்கரைப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாளித்துக் கொண்டு மூர்த்தி,தளம்,தீர்த்தம் என்னும் சிறப்புக்களுடன் விளங்கும் கலியுகவரத்தானாம் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய முருகமூர்த்திப் பெருமானுக்கு வருடாந்த பிரமோற்சவம் நிகழும் மங்கலகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 8 ஆம் நாள் (2019-06-23) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி பத்து(10) தினங்கள் நடைபெற்று பதினோராம் நாள் பூங்காவன உற்சவமும் நடைபெறுவதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் முருகன் அடியார்கள் குறிப்பிடப்படும் நாட்களில் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து சுவாமியை தரிசித்து பேரின்பப் பெறுவாழ்வைப் பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
சிவநெறி செல்வர்களே!
புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞான பைரவப்பெருமானுக்கு விகாரி வருஷம் வைகாசித் திங்கள் 4ம் நாள் சனிக்கிழமை(18.05.2019) சதுர்த்தசி திதியும்,விசாக நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் நடைபெற,காவல் தெய்வமாகவும் வழித்துணை தெய்வமாகவும் விளங்கும் பைரவப்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.இத்தினத்தில் நடைபெரும் கிரியைகளிலும் ஹோமங்களிலும் அடியார்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களினால் வரும் இடர்களைக் களையும் பைரவப்பெருமானின் திவரருளைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வீர்களாக.