காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில் விகாரி வருஷ பிரமோற்சவ விஞ்ஞாபனம்-2019

காரைநகர் களபூமி

திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில்

விகாரி வருஷ பிரமோற்சவ விஞ்ஞாபனம்-2019

குகநேய செல்வர்களே!

ஈழவள நாட்டின் வடமேற்பாகத்தில் காரைநகரில் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத்தந்தருளும் பொருட்டு திக்கரைப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாளித்துக் கொண்டு மூர்த்தி,தளம்,தீர்த்தம் என்னும் சிறப்புக்களுடன் விளங்கும் கலியுகவரத்தானாம் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய முருகமூர்த்திப் பெருமானுக்கு வருடாந்த பிரமோற்சவம் நிகழும் மங்கலகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 8 ஆம் நாள் (2019-06-23) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி பத்து(10) தினங்கள் நடைபெற்று பதினோராம் நாள் பூங்காவன உற்சவமும் நடைபெறுவதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் முருகன் அடியார்கள் குறிப்பிடப்படும் நாட்களில் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து சுவாமியை தரிசித்து பேரின்பப் பெறுவாழ்வைப் பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.