Category: ஆலயங்கள்
Temples
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
காரைநகர் களபூமி தன்னையம்பதி
திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம்
விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு
அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
ஈழவள நாட்டின் வட-மேற்பாகத்தின் காரைநகரின் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருளும் பொருட்டு களபூமி தன்னையம்பதியில் கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டு விளங்கும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 22ஆம் நாள்(07-07-2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து(10) தினங்கள் உற்சவம் நடைபெறுவதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் விநாயகப்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகைதந்து விநாயகப்பெருமானை தரிசித்து பேரின்பப் பெருவாழ்வை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.