Tag: 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் நன்றிநவிலல்

Nantrinavel0001

காரைநகர் மல்லிகையை (S M கேணியடி) பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரீகரலக்ஷ்மி குலசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

jj1a

காரைநகர் மல்லிகையை (S M கேணியடி) பிறப்பிடமாகவும், பிரான்ஸை
 வதிவிடமாகவும் கொண்ட  திருமதி ஸ்ரீகரலக்ஷ்மி  குலசேகரம் அவர்களின் 31ம்
 நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமது குடும்பவிளக்காய் ஒளிர்ந்து எம்மையெல்லாம் ஆளாக்கி வழிப்படுத்தி
07.03.2015 அன்று தில்லைக்கூத்தன் திருவடி எய்திய
 எங்கள் அன்புத்தெய்வம் அமரர் ஸ்ரீகரலட்சுமி குலசேகரம் அவர்கள்
 இறைபாதமடைந்த செய்தி கேட்டு உடனே எமது இல்லம் நாடி வந்து எங்களுக்கு
 ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும், மற்றும் உள்ளூரிலும்,
வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும்,
மலர்வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,
இறுதிக்கிரியைகளிலும் அந்தியேட்டி வீட்டுகிரியைகளின் போதும் பல்வேறு
 வழிகளிலும் எமக்கு உதவிகள் நல்கியவர்களுக்கும், கண்ணீர்
 அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டவர்களும், திருமுறை பாராயணம் செய்த
 அன்பர்களுக்கும், இரங்கலுரை ஆற்றிய பெரியவர்களுக்கும், ஊரில் அனுதாபம்
 தெரிவித்த அனைத்துள்ளங்களுக்கும், சகல வழிகளிலும் உதவிகளை ஒத்தசகைளை
 வழங்கிய உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான
 நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துகொள்கிறோம்


 அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 06-04-2015 திங்கட்கிழமை அன்று பி .ப
12:00 மணியளவில் ,Ganesh Mandapam, 90 Rue Emile Zola, 93120, La
 Courneuve.
 எனும் முகவரியில் நடைபெறும். மேலும் அதனைத் தொடர்ந்து
 நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
 கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு
 கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 குடும்பத்தினர்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்

            அமரர் பேரம்பலம் பாலசுப்பிரமணியம்(BATA பாலா)

(நுகே கொட பிரபல வர்த்தகர் கோபிநாத் D.S.I ஏஜென்சி – வவுனியா)

bala

வையத்துள் அறிமுகம்: 21.06.1953                    தெய்வத்துள் சங்கமம்: 06.03.2015

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் ஹம்டன்லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு, அவரது பிரிவுத்துயரில் பங்குகொண்ட உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி மடல் வெளியிட்டோருக்கும், மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்திய மற்றும் அஞ்சலி உரை நிகழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் சிவபதப்பேறு குறித்த வீட்டுக்கிருத்திய நாளை(05.04.2015) ஞாயிற்றுக்கிழமை வீட்டிலும் 06.04.2015 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய திக்கரை முருகனை வேண்டி நிற்கின்றோம்!

இங்ஙனம்
குடும்பத்தினர்
83/1 ஹம்டன் லேன்
வெள்ளவத்தை, கொழும்பு