அமரர் பேரம்பலம் பாலசுப்பிரமணியம்(BATA பாலா)
(நுகே கொட பிரபல வர்த்தகர் கோபிநாத் D.S.I ஏஜென்சி – வவுனியா)
வையத்துள் அறிமுகம்: 21.06.1953 தெய்வத்துள் சங்கமம்: 06.03.2015
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் ஹம்டன்லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு, அவரது பிரிவுத்துயரில் பங்குகொண்ட உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி மடல் வெளியிட்டோருக்கும், மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்திய மற்றும் அஞ்சலி உரை நிகழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் சிவபதப்பேறு குறித்த வீட்டுக்கிருத்திய நாளை(05.04.2015) ஞாயிற்றுக்கிழமை வீட்டிலும் 06.04.2015 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய திக்கரை முருகனை வேண்டி நிற்கின்றோம்!
இங்ஙனம்
குடும்பத்தினர்
83/1 ஹம்டன் லேன்
வெள்ளவத்தை, கொழும்பு