காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா 21.02.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக பக்தி பூா்வமாக1008 கலசாபிஷேகம் மூலஸ்தான அம்பாளுக்கும்,1008 சங்காபிஷேகம் எழுந்தருளி அம்பாளுக்கும் வடஇலங்கை பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாதஸ்வரகான மழை பொழிய பெரும்திரளான பக்தா்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது.
மண்டல பூா்த்தி விழாவின் உபயகாரா் தெய்வீகதிருப்பணிஅரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது .தொடா்ந்து மாலை 3.30 மணிக்கு ஆலயத்தின் கிழக்குப்புறமாக உள்ள திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களின் நிலத்தில் கலை, கலாச்சார வகுப்புக்களை நடாத்துவதற்கான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இம்மண்டபத்திற்கான அனுசரணையாளா் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடா்ந்து 4.30 மணிக்கு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பிரதான நுழைவாயில் அலங்கார வளைவும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்புக் கொட்டகையும் ஆலய முன்றலிலிருந்து பாடசாலை மாணவா்களின் பான்ட் வாத்தியத்துடன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பிரமுகா்கள் அழைத்துச்செல்லப்பட்டு திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் தனது மகளின் பிறந்ததின நினைவாக வசதி குறைந்த திறமையான 18 மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தார்.