தீவக கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி கலைவிழா 06.11.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோண்குயின்ரஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஓய்வுநிலை பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் வீ.இராசையாவும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டனர்.