மரண அறிவித்தல், திருமதி.கனகசபை விமலாதேவி (அம்பிளா,பாலாவோடை,களபூமி,காரைநகர்) (உக்குளாங்குளம்,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகசபை விமலாதேவி

தோற்றம்: 20.02.1946                                                                                 மறைவு: 28.08.2020

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடை அம்பிளாவை வசிப்பிடமாகவும் தற்போது உக்குளாங்குளம்,வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகசபை விமலாதேவி அவர்கள் 28.08.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம் (கனடா), கனகரூபா(சுவிஸ்), சிவரூபன் (கனடா), காலஞ்சென்ற செங்குட்டுவன் மற்றும் வாசுகி (இலங்கை), மஞ்சுளா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரிதேவி (கனடா),தயாபரன் (சுவிஸ்),நவரஞ்சினி(கனடா),விவேகானந்தராசா (இலங்கை),மகேந்திரராஜா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சரோஜினிதேவி,காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்,மகாதேவா மற்றும் பரமேஸ்வரி,வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கமலேந்திரன் மற்றும் பொன்னம்மா,மனோகரராஜா ஆகியோரின் அன்பு அன்புச் சகலியும்,

ஓவியா,துவ்வியா,நாவின்,செங்கவி,சாம்பவி,பானுஜா,தஸ்மிகா,கேதாரணி,கஜானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் உக்குளாங்குளம்,வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பாலசுப்பிரமணியம் (கனடா) +1 416 726 2026
சிவரூபன் (கனடா) +1 416 995 7659, + 1 647 267 0970
கனகரூபா(சுவிஸ்) +41 793218420
வாசுகி (இலங்கை) + 94 24 2224288
மஞ்சுளா (பிரித்தானியா) + 44 7984615150