மரண அறிவித்தல், கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி (அன்னம் அக்கா) (சடையாளி, காரைநகர்) (ஆனைப்பந்தி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி
(அன்னம் அக்கா)
(சடையாளி, காரைநகர்) (ஆனைப்பந்தி,யாழ்ப்பாணம்)

தோற்றம்: 01.03.1943                                                                                 மறைவு: 14.07.2020

காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், இல.235/3 பருத்திதுறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி(அன்னம் அக்கா) 14.07.2020 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

அரிகரன், அரியமலர்(ஆசிரியை – வியாவில் சைவ வித்தியாலயம், காரைநகர்), உமாதேவி(உமா – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசமூர்த்தி, விக்கிரமசந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், நகுலேஸ்வரி, பரமேஸ்வரலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாயும்,

யசோதா(நில அளவையாளர், பிரதேச நிலஅளவை காரியாலயம், யாழ்ப்பாணம், சிவனருட்குமார், குகன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திராணி, காலஞ்சென்றவர்களான புவனசுந்தராம்பாள், மனோன்மணி, ஐயம்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

அக்ஷதன், அக்ஷனா, தரணிகா, வக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் 15.07.2020 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பல்லோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கரன் (மகன்) – 0779535479, 0776043727
இல.235/3 பருத்திதுறை வீதி ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்