மரண அறிவித்தல், திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) (நடுத்தெரு,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் காரைநகர் நடுத்தெருவை வதிவிடமாக கொண்ட திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தமது 93வது வயதில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மல்லிகாதேவி லோகேஸ்வரனின்(பிரான்ஸ்) தாயாரும்,

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உப தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் சிறிய தாயாரும்,

சிவகுமார் இராசரத்தினம்,ஆனந்தகுமார் இராசரத்தினம் ஆகியோரின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற சேதுநாயகி சபாரத்தினம், மற்றும் பார்வதி சேனாதிராஜா,தேவகி இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சபாரத்தினம் பாலச்சந்திரன்

தொடர்புகளுக்கு:
சபாரத்தினம் பாலச்சந்திரன் (கனடா) +16478187443