மரண அறிவித்தல், திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம் (BAR சோமர் – SOMAS TRANSPORT SERVICE), திருமதி சுகந்தினி தேவராசா, திரு.ஆறுமுகம் தேவராசா (ஓய்வுநிலை DIT,தொலைத் தொடர்புத் திணைக்களம்,கொழும்பு), திரு.தேவராசா தர்சனன்

 

மரண அறிவித்தல்

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம், அவரது அன்பு மகள் சுகந்தினி, அன்பு மருமகன் தேவராசா, பாசமிகு பேரன் தர்சனன் ஆகிய நால்வரும் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணமடைந்துள்ளனர்.

 

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம்

(BAR சோமர் – SOMAS TRANSPORT SERVICE)

அகால மரணமடைந்த சோமசுந்தரம் ஆயிலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் பலாலி வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்து E.S.பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை, கொழும்பில் வசித்து வந்தவரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசமணியின் ஆருயிர்க் கணவரும், கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், அகால மரணமடைந்த சுகந்தினி, மற்றும் பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுபத்திரா, குலேந்திரன், அகால மரணமடைந்த தேவராசா, மற்றும் Dr.அருட்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு,கந்தசாமி,Dr.சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெய்னு,அரிஷ்,கனா, Dr.சயந்தன் -நிருஜா, Dr.அஜந்தன்-பூஜா, அகால மரணமடைந்த தர்சனன் – மற்றும் லக்‌ஷனா, ஹரிஷன்,அஞ்சலி,ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும், மீராவின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

திருமதி சுகந்தினி தேவராசா

அகால மரணமடைந்த சுகந்தினி அகால மரணமடைந்த சோமசுந்தரம் காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், அகால மரணமடைந்த தேவராசாவின் ஆருயிர் மனைவியும், அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், லக்சனாவின் அன்பு மாமியும், கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

திரு.ஆறுமுகம் தேவராசா

(ஓய்வுநிலை DIT,தொலைத் தொடர்புத் திணைக்களம்,கொழும்பு)

அகால மரணமடைந்த தேவராசா மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், அகால மரணமடைந்த சுகந்தினியின் ஆருயிர்க் கணவரும், அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், லக்சனாவின் அன்பு மாமனாரும், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, இராஜேஸ்வரி,யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

திரு.தேவராசா தர்சனன்

அகால மரணமடைந்த தர்சனன் அகால மரணமடைந்தவர்களான தேவராசா-சுகந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கணேசன் – ஜெயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும், லக்சனாவின் ஆருயிர்க் கணவரும், ஹரிஸின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

நால்வரினதும் பூதவுடல்கள் இல 87, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை ஈமைக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் பூதவுடல்கள் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கமலநாதன் – +447956485714
                          +94754102905

குலேந்திரன் – +94770318173

 

2 comments

    • Niranjani Thayaparan (Sivagnanaratnam Master's Daughter) on February 25, 2020 at 8:13 pm

    Condolences to all the family members of Bar Somar uncle. We were deeply affected when we heard the news about his death and the other family members that have passed as well. During the war time I have many fond memories of him driving me from Thirunelveli to Karainagar on his motorcycle when I worked at the university. He was always a caring gentlemen who cared deeply for those around him.

      • Sivapatham on February 29, 2020 at 4:11 pm

      Thank you for the condolence message
      Sivapatham

Comments have been disabled.