இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திரு சிவபாதம் மற்றும் சட்டத்தரனி திருமதி சாந்தகுமாரி சிவபாதம் ஆகியோர் பிரதம விருந்தினராகவும் காரைநகர் மணிவாசகர் சபைத் தலைவரும் காரைநகர் இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை அதிபருமான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை சிறப்பு விருந்தினராகவும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி, தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் தெருவடிப் பிள்ளையார் கோவிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மலர் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு கலையக முன்றலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.