மரண அறிவித்தல்
திரு.விசுவலிங்கம் கனகரத்தினம்
(ஓய்வுநிலை கணக்காய்வுப் பரிசோதகர், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம்)
தோற்றம்: 18.10.1936 மறைவு: 25.10.2019
காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் தற்போது லோட்டன் வீதி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விசுவலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ஞானசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சுந்தரம்மா தம்பதிகளின் மருமகனும்,
புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சுகுமாரன்(புள்ளிவிபர திணைக்களம்,கொழும்பு),சுரேஸ்குமாரன்,சுபாஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்தனைசக்தி,அருந்ததி,பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் சபாரத்தினம்(வெள்ளவத்தை),யோகரட்ணம்(கொக்குவில்),
ராஜராஜேஸ்வரி(கனடா), DR.விஜயரட்ணம்(குழந்தை வைத்திய நிபுணர்,கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி,பரமேஸ்வரி,சரஸ்வதி,காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் மைத்துனரும்,
கவிசன்,லஷிகா,இனியா,இலக்கியா,இதயா,திசங்கர்,மகிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.10.2019 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக மானிப்பாய் பிம்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுகுமாரன் +94 773114340
சுரேஸ்குமாரன் +94 776622036
பாஸ்கரன் +94 777917699