மரண அறிவித்தல், திருமதி திருவாதிரை இரத்தினேஸ்வரி ( வலந்தலை,காரைநகர்) (புதிய செட்டித்தெரு,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி திருவாதிரை இரத்தினேஸ்வரி

பிறப்பு: 24 SEP 1948                                                                                இறப்பு: 28 SEP 2019

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருவாதிரை இரத்தினேஸ்வரி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவாதிரை(ஸ்ரீ திருப்பதி PVT Limited Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தமிழ்செல்வி, சாந்தி, இராஜராஜன், றஞ்சினி, ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா மற்றும் விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரசிங்கம், சண்முகலிங்கம், ஸ்ரீஷயானா, கலாதரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரத்தினம், பரமேஸ்வரி, கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை மற்றும் வடிவழகாம்பாள், காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானம், குகதாசன் ஆகியோரின் அன்பு சகலியும்,

நிவேதிகா, ராசாராம், யசோதை, துளசி, பானுமதி, பரசுராம், சங்கவி, கிஷான், வசீகரன், சத்தியசுருதி, சக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 30-09-2019 திங்கட்கிழமை ஆகிய நாட்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக் கிரியை நடைபெற்று பின்னர் பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
இல. 70 1/1, புதிய செட்டித்தெரு,
கொழும்பு

தொடர்புகளுக்கு:
ராஜன் – மகன் (Mobile) : +447967003691
ராமன் – மகன் (Mobile) : +447813204474