மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகம் மனோன்மணி
பூமியில்: 1937-04-16 இறைவனடியில்: 2019-08-19
காரைநகர் நாவலடிக்கேணியைப் பிறப்பிடமாகவும், களபூமி, யாழ்ப்பாணம் பிறவுண் (Brown) வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மனோன்மணி அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா ஆறுமுகம் (Arumugam Textiles) அவர்களின் அன்பு மனைவியும், நல்லைநாதன், உமாதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருஷ்ணமூர்த்தி, வேலாயுதபிள்ளை, சுந்தரநாயகி , பேரின்பநாதன், பாலசெந்தினி, தேவராணி, சிவவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 12:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:
வேலாயுதபிள்ளை (சரோஜினிதேவி) (கனடா) : 416-332-2535 / 647-294-0149
கோடீஸ்வரன் (கனடா) : 905-591-1362 / 647-464-9054
2 comments
My heartfelt condolences.
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி.