காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி க.இரத்தினசிங்கம் அவர்களினால் வைபவ ரீதியாக இந்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபை, மற்றும் காரைநகர் வைத்திய சாலை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.

அமரத்துவமடைந்த வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகள் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகர் வைத்திய சாலை வளாகத்தில் பல இலட்சம் ரூபா செலவில் இந்த பஸ்தரிப்பு நிலையம் அமைத்திருந்தனர்.

அவரது பிள்ளைகள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் காரைநகர் கம்பன் கழக அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.