காரை.மண் தந்த கலைஞர் பி.எஸ்.சுதாகரன் தயாரித்து இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படம் சனிக்கிழமை திரைக்கு வருகிறது!

காரை.மண் தந்த கலைஞர் பி.எஸ்.சுதாகரன் தயாரித்து இயக்கிய

‘ஒருத்தி’

திரைப்படம் சனிக்கிழமை திரைக்கு வருகிறது.

வானொலிக் கலைஞராக அறிமுகமாகி சிறந்த தொலைக்காட்சிக் கலைஞராகவும் திரைப்படக் கலைஞராகவும் கனேடிய தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குகின்ற பி.எஸ்.சுதாகரன் அவர்கள் தயாரித்து இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை 115, York Blvd. Richmond Hill என்கின்ற முகவரியில் அமைந்துள்ள York திரையரங்கில் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. பிற்பகல் 1.00மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக வெளியிட்டு வைக்கப்படவுள்ள இத்திரைப்படத்தில் கனடா, தமிழீழம், ஐரோப்பா, தமிழகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புக்கள் நடிப்பு, இசை, பாடல்கள், தொழில்நுட்பம் ஆகியன சார்ந்து இடம்பெற்றுள்ளன. இத்திரைப் படத்தின் காட்சிகள் யாழ்ப்பாணத்திலும், கனடாவிலும், படமாக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பானதாகும். தமது இருபது ஆண்டு கால கலைத்துறை அனுபவத்தைக் கொண்டு இத்திரைப்படத்தினை தரமானதாகத் தயாரித்து இயக்கி வெளியிடுவதில் வெற்றிகண்டுள்ள கலைஞர் பி.எஸ்.சுதாகரனின் முயற்சி கனேடிய ஊடகங்களினதும், பல்துறை சார்ந்த கலைஞர்களினதும், மக்களினதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளது என்பதுடன் கனேடிய தமிழ்த் திரைப்படத் துறையின் வரலாற்றில் பதிவிடப்படும்வண்ணம் அமைந்துள்ளது. இச்சாதனைக்கு சொந்தக்காரரான கலைஞர் பி.எஸ்.சுதாகரன் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அமரர் சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சரக்குருக்கள் அவர்களின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தினை வரவேற்று ஆதரிப்பதன் மூலம் அதனை வெற்றிபெறச்செய்யவேண்டியது அனைவரது கடமையாகும்.