காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் மாணவர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது!

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தின் முதற்கட்டமாக முதலாவது மாடியின் ஒரு பகுதி தற்காலிகமாக மாணவர்கள் பாவனைக்கு கடந்த வருடம் விஜயதசமி நன்னாளின் போது திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரந்து வாழும் காரைநகர் மக்கள் புத்தகங்களையும் தளபாடங்களையும் அன்பளிப்பாக வழங்க தொடங்கினர்.

தற்பொழுது பாடசாலை மாணவர்கள் இம்மாணவர் நூலகத்தின் மூலம் பயனடையத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி மீண்டும் முதலாம் மாடியின் மிச்சமுள்ள பகுதியினை நிறைவு செய்யவும் கட்டிட பணிகள் தொடங்கியுள்ளன.

இதோ இத்துடன் கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து காரைநகர் சென்றுள்ள கலாநிதி தயாபரன் நடராஜா அவர்கள் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

DSC03605 (Copy) DSC03606 (Copy) DSC03958 (Copy) DSC03959 (Copy) DSC08956 (Copy)