காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 09/07/2014 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆலய அறங்காவலர் மகாராணி க. சோமசேகரம் தலைமையில் கணபதீசுவரக்குருக்கள் நூலகத்தில் நடைபெற்றது.

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 09/07/2014  புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆலய அறங்காவலர் மகாராணி க. சோமசேகரம் தலைமையில் கணபதீசுவரக்குருக்கள் நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காரைநகர் இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் எஸ்.விஜயகுமார் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல்,கிராமசேவையாளர் இ.திருப்புகழூர்சிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கினர்.

இந்த வாழ்வாதார உதவியில் 

1.காரைநகரைச் சேர்ந்த வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதி இலங்கை வங்கியில் நிரந்தர வைப்பிலிட்டு வைப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


2.மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு கிணறு அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது.


3.வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வறிய குடும்பம் ஒன்றிற்கு கோழி வளர்ப்புக்காக 15 ஆயிரம் ரூபா நிதி இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது. ஏற்கனவே அந்தக் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


4.கண் பார்வையிழந்த காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்த நாகராசாவின் குடும்பத்திற்கு வீடமைப்பதற்காக 25 பை சீமெந்து இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது. ஏற்கனவே 35 ஆயிரம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC09885 (Copy) DSC09886 (Copy) DSC09887 (Copy) DSC09888 (Copy) DSC09889 (Copy) DSC09890 (Copy) DSC09891 (Copy) DSC09892 (Copy) DSC09893 (Copy) DSC09894 (Copy) DSC09895 (Copy) DSC09896 (Copy) DSC09897 (Copy) DSC09898 (Copy) DSC09899 (Copy)