மரண அறிவித்தல், திருமதி ஆனந்தலட்சுமி பாலசிங்கம் (நல்லூர் மணியம்) (உரிமையாளர் – நல்லூர் மயிலூரன் அரங்கம்) (55/2 அம்மன் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

                     மரண அறிவித்தல்

             திருமதி. ஆனந்தலட்சுமி பாலசிங்கம்(நல்லூர் மணியம்)
                             (உரிமையாளர் – நல்லூர் மயிலூரன் அரங்கம்)

பிறப்பு :07.01.1947                                                                                                        இறப்பு : 24.10.2018

அத்தியடியை பிறப்பிடமாகவும் 55/2 அம்மன் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தலட்சுமி பாலசிங்கம் (நல்லூர் மணியம்) அவர்கள் 24.10.2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான காரைநகர் களபூமியைச் சேர்ந்த கந்தையா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கத்தின் (நல்லூர் மணியம்) அன்பு மனைவியும்,

மஞ்சுளா (அமெரிக்கா), மயிலூரன் (கனடா), சதீஷா (லண்டன்), கலாஜினி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராஜசெல்வன் (அமெரிக்கா) மற்றும் அருந்தவராணி (கனடா), சிறீஸ்கந்தராஜா (லண்டன்), விஜயராஜா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மீனு, விஷ்ணு , லட்சுமி சிவதர்சன், சதீஸ்சன், சிந்து, சுகன்ஜா , இந்துஜன். ஷகாரிக்கா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (26.10.2018) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மயிலூரன் (மகன்)
077 715 4672, 077 784 0769

55/2 அம்மன் வீதி, கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்