காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காரைநகர் வேம்படியில் 02.09.2018 அன்று சுபநேரத்தில் இடம்பெற்றது!

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காரைநகர் வேம்படியில் 02.09.2018 அன்று சுபநேரத்தில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு 6.5 பரப்பு காணியை அன்பளிப்பு செய்த பரோபகாரி சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவர்களுடன் யாழ் உயர் அதிகாரிகள் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி திரு. நந்தகுமார் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.