காரைநகர் பிரதேச சபையின் மூலம் பத்து லட்ச ரூபா செலவில் 50 வாட்ஸ் மின் விளக்குகள் 130 பொருத்தும் பணி 03.08.2018 ஆரம்பித்து வைக்கப்பட்டது. சபையின் 11 உறுப்பினர்களும் தலா 11 மின்விளக்குகள் பொருத்தும் இடத்தை தெரிவு செய்வதற்கும் மிகுதி 9 மின்விளக்குகளை வலந்தலை தொடக்கம் பிரதான வீதியில் பொருத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கான நிதியை வடமாகாண சபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.