காரைநகர் வலந்தலை மொந்திபுலத்தில் தீ விபத்து

காரைநகர் கல்லூரி வீதி மொந்திபுலத்தில் உள்ள வளவொன்றில் கொழுத்தப்பட்ட குப்பை அப்பகுதி எங்கும் பரவியதால் 50இற்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து நாசமானதுடன் அயல் வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

 இதனைக் கண்னுற்ற இளைஞர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலாளர் திருப்புகழூர்சிங்கம் எடுத்த தீவிர முயற்சியினால் தீ பரவுவது முற்றாகத் தடுக்கப்பட்டதுடன் தீயினையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த காரைநகர் பகுதி கிராமசேவையாளர்கள்,சமுர்த்திஅலுவலர்கள்,பிரதேசசெயலகஅலுவலர்கள்,பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்,பிரதேச சபைத் தலைவர்,மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து யாழ் மாநகர சபை,பிரதேச சபை தீயணைப்பு படை,கடற்படை ஆகியோரும் தீவிரமாகச் செயற்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.