காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (05.05.2018)

 

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (05.05.2018)

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இக் கூட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயப்பட உள்ளதுடன் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கான அங்கீகாரங்களும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இக் கூட்டத்திற்கு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்.அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இக் கூட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி விவகாரம்,கடும் வரட்சியினால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்,உள்ளிட்ட விடயங்கள் கடுமையாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.