யாழ்ற்ரன் கல்லூரியில் St. John’s Ambulance மாணவர் அணி ஆரம்பம்

கடந்த 23/03/2014 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9 மணியளவில் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரியின் St. John's Ambulance அணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 70 மாணவர்கள் கொண்ட இவ்வணிக்கு St. John's Ambulance யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் திரு. ஈழநேசன் அவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டனர். St. John's Ambulance  அணியினை எமது கல்லூரியில் ஆரம்பித்து வைப்பதற்கு செயற்பட்ட ஆசிரியர் திரு. வே. சிவநேசன் அவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்.

 


வே. முருகமூர்த்தி

அதிபர்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்