காரைநகர் அரசினர் வைத்தியசாலைக்கான அபிவிருத்திச் சங்கம் ( 23.03.2014)நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் அரசினர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி கே.இந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான சங்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் தலைவராக வைத்தியசாலை வைத்திய அதிகாரி கெ.இந்திரமோகன் அவர்களும் உப தலைவராக மருத்துவர் எஸ்.சுவாமிநாதன் அவர்களும் செயலாளராக  ந.பாலகிருஸ்ணன் அவர்களும் பொருளாளராக  சுந்தரலிங்கம் அகிலன் அவர்களும் உப செயலாளராக  க.பிரதீபனும் தெரிவு செய்யப்பட்டதுடன் 10 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவாகினர்.