45ஆம் நாள் நினைவஞ்சலி

45ஆம் நாள் நினைவஞ்சலி

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் 45ஆம் நாள் நினைவஞ்சலி

கவிதை ஆக்கம் கலாபூஷணம் பண்டிதை சோ. யோகலட்சுமி (ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்) அவர்கள்.

அமரர் நல்லதம்பி விஜயரத்தினம், சிவயோகம் விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் இளைய மகன் ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இங்ஙனம்
சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
22.02.2018