மரண அறிவித்தல்,திரு.துரையப்பா விஸ்வநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை) ( நடுத்தெரு,காரைநகர்) (வட்டுக்கோட்டை) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

                    மரண அறிவித்தல்

                     திரு.துரையப்பா விஸ்வநாதன்

             (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை)

தோற்றம்: 27-06-1927                                                         மறைவு: 29-01-2018

காரைநகர், நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வந்தவருமாகிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் திரு.துரையப்பா விஸ்வநாதன் 29-01-2018 திங்கட்கிழமை சிட்னியில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா,முத்தாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும் காஞ்சென்றவர்களான செல்லையா,சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற ஜீவநாயகியின் ஆருயிர்க் கணவரும் சியாமளா, பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும் வைத்தியகலாநிதி புண்ணியமூர்த்தி, வைத்தியகலாநிதி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன், நட்டேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் Rookwood Cremotorium, (South Chapel) Memorial Ave. Rookwood 2141 Australia என்ற இடத்தில் 31-01-2018 புதன்கிழமை மு.ப.9.30 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றபின்னர அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: சியாமளா +61297470997
பிரியா +61755006383