காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபைத் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற போது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு நிலை அதிபர் க.தில்லையம்பலம்.ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் வே.முருகமூர்த்தி,வியாவில் சைவ வித்தியாலய சிரேஸ்ர ஆசிரியர் பா.இராமகிருஸ்ணன் ஆகியோரும் பொருளாளராக ஆசிரியர் பொ.யோகேஸ்வரனும் சபையின் பரீட்சைச் செயலராக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கமும் தெரிவு செய்யப்பட்டதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை அதிபர் க.நேர்த்திரானந்தன்,காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன்,காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய ஆசிரியர் தே.சத்தியானந்தன்.கூட்டுறவுத் திணைக்களப் பரிசோதகர் சு.அகிலன்.ஓய்வு நிலை வங்கியாளர் து.நாகேந்திரம்,பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் நா.பாலகிருஸ்ணன்,மா.கனகசபாபதி.சி.சோதிலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்குப் பரிசோதகர்களாக வே.சபாலிங்கம்,ஆசிரியர் வே.உருத்திரசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர