மரண அறிவித்தல், திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் (மருதடிப் பிள்ளையார் கோவிலடி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

                    மரண அறிவித்தல்

               திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர்

 

தோற்றம் : – 1957.07.20                                                    மறைவு :- 2017.11.10

காரைநகர் மருதடிப் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் அவர்கள் 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவபாதவிருதயரின் (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் நாகம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மாவின் அருமை மருமகளும், சிவகௌரி, சிவகாந்தனின் பாசமிகு தாயாரும், சசிவர்ணாவின் அன்பு மாமியாரும், ஹீசஞ்சயின் பாசமிகு பேத்தியும், சரோஜினிதேவி, தனலக்‌ஷமி, கமலாதேவி, நகுலாதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், மங்கையர்க்கரசி, புனிதவதி, சுந்தரமூர்த்தி, அருணந்தி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் சனிக்கிழமை ( 11.11.2017 ) காலை 10:00 மணியளவில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை ( 12.11. 2017 ) காலை 7:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று 10:00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
குடும்பத்தினர்
011-94-77-897-5189.